பங்குச் சந்தை மந்திரம்... • Best Tips for Share Market investing in Tamil • Beginners Tips • TNEGUYS

 நமக்கு அதிகமான லாபம் தரக்கூடிய முதலீடுகளில் பங்குச் சந்தையும் ஒன்று. இப்படி அதிகமான லாபம் தரக்கூடிய பங்குச்சந்தையில் நாம் கடைபிடிக்க வேண்டிய மூன்று முக்கியமான விஷயத்தை பற்றி தான் இன்று, நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.


1. தெரியாத புரியாத நிறுவனங்களில் முதலீடு செய்ய கூடாது...

        நாம் பங்குச்சந்தையில் தெரியாத, புரியாத நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடாது. உதாரணமாக, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்கின் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த நிறுவனம் எது சார்ந்த நிறுவனம், யாருடைய நிறுவனம் என்பது போன்ற அடிப்படை தகவல்கள் ஏதும் நமக்குத் தெரியாது. 

 ஆனால், முன்பு  சொன்னது போல, அந்த நிறுவனத்தின் பங்கு விலையானது ஏற்றத்தில் உள்ளது.  நாம் பங்கின் விலை ஏற்றத்தை மட்டும் வைத்து அந்த நிறுவனத்தை வாங்கினால் நாம் நம்முடைய பணம் இழக்க  வாய்ப்புள்ளது. 

ஏனெனில், ஒரு நிறுவனம் எந்தத் துறை சார்ந்த நிறுவனம் மற்றும் அது எவ்வாறு லாபம் ஈட்டுகிறது என்பது போன்ற அடிப்படையான தகவல்கள் நமக்குத் தெரிந்தால் தான் தொலைநோக்கில் அது நன்றாக செயல்படுமா அல்லது செயல்படாதா என்பதை நம்மால் கணிக்க முடியும்.   அதனால்,  நமக்கு தெரிந்த புரிந்த நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். நமக்கு தெரியாத புரியாத நிறுவனங்களில்  முதலீடு செய்ய கூடாது...

2. கொக்கு போல் பொறுமை இருக்க வேண்டும்...

 பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது நாம் ஒரு கொக்கை போல் செயல்பட வேண்டும்.  ஒரு கொக்கானது தனக்கான இரை வரும் வரை பொறுமையாகக் காத்திருக்கும். தனக்கான இரை வரும் போது அதை சரியாக கொத்தி சாப்பிடும். 

அதுபோல, நாமும் நமக்கான பங்கு நமக்கான சரியான விலையில் கிடைக்கும்போது அதை சரியாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

 மேலும், அதனை நாம் நீண்ட காலத்திற்கு பொறுமையாக வைத்திருந்தால் அதிலிருந்து நமக்கு அதிகமான லாபம் என்பது கிடைக்கும். அதனால் ஒரு பங்கை வாங்கும் போதும் சரி இருக்கும்போதும் சரி நாம் எப்போதும் ஒரு கொக்கு போல் பொறுமையாக இருக்க வேண்டும்...

3. மற்றவர்களை பின்பற்றக் கூடாது...

         நாம் பங்குச்சந்தையில் எப்பொழுதும் மற்றவர்களை பின்பற்றக் கூடாது ஏனெனில், அவர்களின் நிதி நிலை என்பது வேறு நம்முடைய நிதி நிலை என்பது வேறு.   அவர்களால்  ஒரு பெரிய தொகையை இழந்தால் கூட தாங்கிக்கொள்ள முடியும் நம்மால் முடியுமா என்பது நமக்குத்தான் தெரியும்.

 அதனால், நம்முடைய நண்பர்கள் செய்கிறார்கள் அல்லது பெரிய முதலீட்டாளர்கள் செய்கிறார்கள் என்று  நமக்கு தெரியாத  முதலீடகளை செய்தால் நம்முடைய பணத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல் நாமும் சிக்கலில் மாட்டிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. 

நாம் நினைக்கலாம், பெரிய பெரிய முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தின் பங்கில்  முதலீடு செய்கிறார்கள் என்றால் அது சரியான முதலிடாக தானே இருக்கும் என, ஆனால் பங்குச் சந்தையில் வாரன் பஃபெட் அவர்களே பத்து நிறுவனங்களில் முதலீடு செய்தால் அதில் மூன்று நிறுவனங்கள் சரியாக செயல்படாமல் போக வாய்ப்பு உள்ளது. அதனால், நம்முடைய நிலை அறிந்து நமக்கான பங்கை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். எப்பொழுதும்  மற்றவர்களை பின்பற்ற கூடாது... 


வாசிக்காமல் வலையொளியில் (YouTube) காண,





Powered by Blogger.