விதியை மாற்று பணக்காரர் ஆகு ! • 50/30/20 Budget Rule in TAMIL • Tneguys
நாம் ஒரு பணக்காரர் ஆவதற்கு பணத்தை சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அந்த பணத்தை சரியாக கையாளுவதும் முக்கியமாகும். இன்னும் சொல்லப்போனால் பணத்தை சம்பதிப்பதை விட பணத்தை கையாள்வது (Money Management) மிகவும் முக்கியம்.
இன்று, நாம் நம்முடைய பணத்தை கையாளுவதற்கான ஒரு விதியைப் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
50 30 20 விதி (Rule). ஆமாங்க, இந்த விதியோட பெயர் இதுதான்.
முதல் பகுதியான, 50 சதவீதத்தை அதாவது நம்முடைய வருமானத்தில் பாதியை இந்த விதிப்படி, நாம் நம்முடைய அத்தியாவசியத் தேவைகளுக்காக (Needs) பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதாவது, நாம் கண்டிப்பாக செய்ய வேண்டிய செலவுகளான நம்முடைய உணவு (Food), உடை (Dress), இருப்பிடம் (Rent) மருத்துவம் (Medicine) உள்ளிட்ட தேவைகள்.
அடுத்ததாக உள்ள, 30 சதவீதத்தை நாம் நம்முடைய ஆசைகளுக்காக (Wants) பயன்படுத்தி கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, சுற்றுலா செல்வது (Travel), திரைப்படம் பார்ப்பது (Watching Movies), நமக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொள்வது (Shopping) ஆகியவற்றைச் சொல்லலாம்.
கடைசியாக உள்ள, 20 சதவீதத்தை நாம் இந்த விதிப்படி கண்டிப்பாக சேமிக்க (Save) வேண்டும். சேமிப்பதோடு மட்டுமல்லாமல் அதனை கண்டிப்பாக முதலீடு (Invest) செய்ய வேண்டும். இல்லையெனில், அது பணவீக்கத்தின் (Inflation) காரணமாக காணாமல் போகிவிடும். அதனால் சேமித்த பணத்தை சரியாக முதலீடு செய்ய வேண்டும்.
இங்கு, நாம் இந்த 20 சதவீதத்தை கடைசியாக பார்த்தாலும் இதையே நாம் நம்முடைய வருமானத்தில் முதலில் செய்ய வேண்டும்.
இந்த விதிப்படி, நாம் நம்முடைய பணத்தை ஒழுங்காகவும் தொடர்ச்சியாகவும் கையாண்டு வந்தால், கண்டிப்பாக கூடிய விரைவில் நாம் ஒரு பணக்காரர் ஆகி விடுவோம்.
அதிக செலவும் வேண்டாம்! கஞ்சத்தனமும் வேண்டாம்!
எடுத்துக்காட்டை, நாம் மேலே பார்த்த விதியை வைத்தே பார்ப்போம். இந்த விதியில் 50 சதவீதத்தை நாம் கண்டிப்பாக செலவு செய்து விடுவோம்.
அடுத்ததாக உள்ள, 30 சதவீதத்தை நாம் நம்முடைய விருப்பங்களுக்கு செலவழிப்பதற்கு பதிலா கஞ்சத்தனமாக அதனை சேமிக்க வேண்டும் என்று எண்ணுவோம்.