"ஆரோக்ய சேது செயலி "- யின் சாதனை (AAROGYA SETHU APP)
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் தடமறியும் செயலியான, "ஆரோக்ய சேது" உலகளவில் அதிவேகமாக 5 கோடி பயனாளர்களை எட்டி சாதனையை படைத்துள்ளது. வெறும் 13 நாட்களில் இந்த சாதனையை 'ஆரோக்ய சேது' செயலி படைத்துள்ளது.
இதன் மூலம் 19 நாட்களில் 5 கோடி பயனாளர்களை எட்டியிருந்த, "போக்கி மேன் கோ" ( pokeman go ) செயலியை முந்தியுள்ளது.
குறிப்பாக, சமீபத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடிய போது இந்த செயலியை பற்றி குறிப்பிட்டார்.
அதன்பின்னர், அந்த ஒரு நாளில் மட்டும் 1 கோடியே 1 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
கொரோனா தடுப்பிற்கு இந்த செயலி பயனதுள்ளதாக இருப்பதாக பதவிறக்கம் செய்த பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.